களத்துமேடு அத்தியாயம் – 10
எழுத்து: அரன் “உளுந்தும் சின்ன வெங்காயமும் போட சொல்லிருக்கேன். வேல சரியா நடக்குத்தானு இசக்கி ட்ட சொல்லு பாக்க சொல்லு ல.” செங்காளையிடம் சொன்னார் அப்பா.“மாயா ட்ட சொல்லிருக்கேன். கூட மாட நின்னு பாத்துக்குவான்.”“நம்ம இனத்தான் ல.. பய ஒரு உறுத்தாதான் இருக்கான். கூடயே வச்சுக்க. பழக்கமும் தொழிலும் எனஞ்சி தா ல இருக்கணும்” அப்பாவின் உபதேசம் வேறு.
