Sabari Savithiri

எங்களுக்கும் காலம் வரும்

எழுத்து : சபரி ஆறு முதல் ஒன்பது மாதம் பயிர் வளர்த்த  மஞ்சள் கிழங்குகள் பல டன் கணக்கில் இருக்கும், அதை பல பகுதிகளாக பிரித்து பெரிய இரும்பு பீப்பாயில் வேறுகளுடன் இருக்கும் மஞ்சள் கிழங்குகள் நிரப்படும், பெரிய பள்ளம் தோண்டப்படும், பீப்பாயை அதனுள் வைத்து சுற்றி தீ மூட்டப்படும் சுமார் ஒரு மணி நேரம் வேகவைக்கப்படும், அதன் பின் அந்த பீப்பாய் நிறைய இருக்கும் மஞ்சள் கிழங்குகள் பூமியில் கொட்டி காயவைக்கப்படும், இரவு முழுக்க இது…

Read More

மண்டைக்காய்தலும் சிறு சந்தோஷங்களும்

எழுத்து: சபரி சீதா , மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். சதா அணிக்குள் நடக்கும் கூட்டங்களும், அரைவேக்காடு அலுவலக அரசியலும், அதை சமாளிக்கும் யோசனைகளுமாக நாட்களை கடத்தும் ஒரு பெண். தொடர் வேலைக்கு மத்தியில் அவ்வப்போது மாமியார் குடைச்சல் வேறு.

Read More

களத்துமேடு – அத்தியாயம் 6

எழுத்து: அரன் ஊரே பூக்கோலம் சூட, ரத வீதி எங்கும் மத்தளம் ஆட, பொண்டு பொடிசுகள் எல்லாம் ஆரவாரத்தில் ஆடி மகிழ, பக்தர்கள் வடமிழுத்து அழகாய் அசைந்து வந்தாள் உலகம்மன். ரத வீதி, ரதம் போகும் வீதி. வருசத்துக்கு ஒருக்கா வென்று கொண்டாடப்படும் ஊர்த் திருவிழா. தேர்ப் போகும் வழி நெடுக சனம் கண்பறிக்கும் விளையாட்டு சாமான் முதல், நாக்கு சுவைக்க நல்ல முறுகல் தோசை சாம்பார் வரை எல்லாம் நலம் தான். 

Read More

பூச்சாண்டி வாரான்

எழுத்து : சபரி ‘டேய் மோகன் நில்லுடா .’ ‘நீயாவது ஒரு வாய் சாப்புடு ‘ பாட்டி அமுதாவை பார்த்து சொன்னாள். ‘எங்க ரெட்டை சுழிகளை காணோம்’ பாட்டி சோற்று தட்டை கையில் ஏந்தி வீடு முழுக்க இரட்டையர்களை தேடி சுற்றி வந்தாள்.

Read More

களத்துமேடு – அத்தியாயம் 5

எழுத்து : அரன் “இன்னும் ஏறு ல. அடிக்கிற வெயிலுக்கு பத்து காய் லாம் காணாது. நா ஒருத்தனே உறிஞ்சிட்டா, நீ பாத்துட்டு மட்டும் இருப்பியா… மள மள னு பறிச்சி போடுல சுடல.. ” சுடலை பறித்துப்போட்ட நுங்கு பழங்களை பொருக்கிக்கொண்டிருந்தான் இசக்கி.

Read More

மைசூர் சாண்டலும் பீங்கான் பொம்மையும்

எழுத்து : சபரி நவயுக மாந்தர்களுக்கு நாடு நாடாய் சுற்றி நாடோடி வாழ்க்கை வாழ்வதில் மோகம் உண்டாகியிருப்பதை காண முடிகிறது ஆனால் பண வசதி இருந்தால் மட்டுமே நாடோடி வாழ்க்கை எங்கு சென்றாலும் அழகான அற்புதமான அனுபவமாய் இருக்கும். வாழ்வாதாரத்திற்க்கே சோதனை என்றால் ?

Read More

களத்துமேடு – அத்தியாயம் 4

எழுத்து : அரன் “ஏல பஸ்ஸ்டாண்ட் பக்கங் ஏதோ சண்டையாமே. உரக்கடைக்கு போயிருக்க நீ னு உங்க அய்யா சொன்னாவ. பிரச்சனை இல்லைல பா. ” விசயம் அறிய முற்பட்டால் செங்காளையின் அம்மா. வண்டியை நிப்பட்டிவிட்டு, வெளியே இருந்த வாளியில் கை கழுவிவிட்டு, உள்ளே நடந்தான் செங்காளை. 

Read More

பொங்கல்

எழுத்து : சபரி “கார்த்தி , டேய் கார்த்தி” உரத்தக்குரலில் நிஷா எழுப்பினாள். “ஒரு நாள் கூட நிம்மதியா தூங்க விடமாட்டியா” கார்த்தி கடிந்து கொண்டே எழுந்தான். ஒரு வாய் தேநீர் குடித்து விடலாம் என்று எண்ணி தேநீர் கேட்க வாய் திறக்கும்முன் நிஷா “சீக்கரம் போயி நெய் வாங்கிட்டு வா, பொங்கல் அடுப்புல இருக்கு”.

Read More

களத்துமேடு – அத்தியாயம் 3

எழுத்து : அரன் போகிற வழியெல்லாம் நல் நேசமும், நல் வார்த்தைகளும் செழிக்க செய்வேன்’, படுக்கையறை கண்ணாடியின் பக்கம், தன் பொன்மொழியை ஒரு முறை பார்த்துக்கொண்டாள்

Read More

டோக்கி

எழுத்து : சபரி மனைவியை ஆச்சரியப்படுத்த பரிசு வாங்கிக்குடுத்திருந்தால் தெரிந்திருக்கும் அந்த பரிசு ஆச்சரியமா இல்ல அதிர்ச்சியான்னு. பெண்களுக்கு பிடித்த பரிசுன்னு பட்டியலிட்டா கண்டிப்பா இது இருக்கும். அவளுக்கு தெரியாம வாங்கறதுக்குள்ள அவளோட எத்தனையோ சந்தேகங்களுக்கு ஆளாயிட்டேன். எல்லாம் அவளோட முகத்துல சந்தோஷத்தை பார்க்கத்தான்.

Read More