பனிக்கால நாய்கள்
எழுத்து : சபரி அனிதா, தன் காதலனுடன் பேசிக்கொண்டிருந்தாள். கண்மணி உற்று பார்த்துக்கொண்டிருந்தாள். என்ன பாக்குற என்றார் போல் புருவங்களை மேலும் கீழும் அசைத்து காட்டினாள். ஒன்றும் இல்லை என்று தலையை அசைத்தாள் ஆனால் மனதளவில் எப்பொழுது இணைப்பை துண்டிப்பாள் என்றெண்ணினாள். இப்படியே பல நிமிடங்கள் கடந்தன, ஏழாவது முறை வைக்கிறேன் என்று சொல்லி நிஜமாகவே வைத்துவிட்டாள்.
