இரவின் குரூரம்
அந்த நாள் எப்படியோ ? இரவு என்ன உணவோ? எதுவும் தூங்க போகும் போது நினைவுக்கு வருவதே இல்லை ஆனால் ஏனோ மனதில் இனம் புரியா பயம் மட்டும் வருகிறது. ஒளி இல்லாததனாலா இல்லை ஒலி இல்லாததாலா ? மின் விசிறி இறக்கை சத்தம் மட்டும் இல்லையெனில் பைத்தியம் பிடிப்பது போல் ஆகிறதே. ஒயிட் நாய்ஸ் என்கிறார்கள், மின் விசிறி சத்தம் இதர அச்சம் தரும் சத்தங்களை தவிர்க்கிறதாம்.