
எங்கிருந்தோ வந்த மாமா
ஈரோட்டுக்கும் கரூருக்கும் இடையே இருக்கும் ஊர் பாசூர், பாசூரின் பெருமை பாசூர் அணை தான். பொங்கிவரும் காவேரி என்று சும்மாசொல்லவில்லை மழைக்காலத்தில் நிஜமாகவே பொங்கிவரும் காவேரியை பாசூர் அணையில் சிறிது வேகம் குறைத்து கரூர் நோக்கி அனுப்பப்படும். நள்ளிரவில் அணைமேல நின்னு நிலா ஒளியில் தனியாக நின்று பார்த்தால் பேரோலமிடும் நீரோட்டம்,கொள்ளளவை கண்களால் காணமுடியாது ஆனால் மனதால் உணர்ந்து பயம் தலைக்கேறும்.